search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை பெண் நகை பறிப்பு"

    மதுரையில் கல்லூரி மாணவியிடம் மர்ம நபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் நகை பறிப்பு சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள மீனாட்சி ரோட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று கல்லூரியை முடித்து விட்டு பழங்காநத்தம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மாணவியை பின் தொடர்ந்து வந்தனர்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென்று மர்ம நபர்கள், ஸ்ரீநிதியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகை பறிப்பு நடந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் போலீசார் பல மணி நேரம் அங்கேயே நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதை அடிக்கடி பார்க்க முடியும். அந்த இடத்தில் போலீசார் இருந்தும் எந்தவித பயமும் இன்றி மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் மெத்தனத்தையே காட்டுகிறது.

    மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். #arrestcase

    மதுரை:

    மதுரை மாவட்டம், கருப்பாயூரணி மீனாட்சி கார்டன் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 29). இவர் சம்பவத்தன்று மாலை குழந்தைகளுடன் டென்னிஸ் கிளப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல் இந்திரா பிரியதர்ஷினி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது.

    இது தொடர்பாக இந்திரா பிரியதர்ஷினி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கல்மேடு அம்மையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் தமிழரசன் (19), புளியங்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் வசந்தகுமார் (18) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்திரா பிரியதர்ஷினியிடம் செயினை பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய ஆதீஸ்வரன் என்பரை தேடி வருகின்றனர்.

    ×